Thursday, January 27, 2022

53. புலர்ந்தும் புலராத(மலர்ந்தும் மலராத) **

 

புலர்ந்தும் புலராத காலை முதற்கொண்டு உனது இசை கேட்ட நாள் 
அந்த நிலையைத் தான் கண்டு போதும் எழு என்று தாயின் வசை கேட்ட நாள்
துறக்க முடியாமல் உனது இசைதன்னில் மனதைப் பறி தந்த நாள் 
அந்த நினைவு மறக்காமல் நெஞ்சில் என்றென்றும் இருக்கும் அது தங்க நாள் 
(Short Music)
புலர்ந்தும் புலராத காலை முதற்கொண்டு உனது இசை கேட்ட நாள் 
அந்த நிலையைத் தான் கண்டு போதும் எழு என்று தாயின் வசை கேட்ட நாள்
துறக்க முடியாமல் உனது இசைதன்னில் மனதைப் பறி தந்த நாள் 
அந்த நினைவு மறக்காமல் நெஞ்சில் என்றென்றும் இருக்கும் அது தங்க நாள் 
(MUSIC)

தாயை தினம் கெஞ்சி தந்தை கால் பற்றி காசை அடைந்தோம் அந்நாள் 
படம் காணப் பறந்தோம் அந்நாள் 
அன்று தரையில் மணல் குன்று செய்து அதன் மீது அமர்ந்து பார்த்தோம் அந்நாள்
இசையைக் கேட்டோம் அந்நாள்
உந்தன் பெயரைத் திரை கண்டு இளமை மதம் கொண்டு 
உந்தன் பெயரைத் திரை கண்டு (vsm)
இளமை மதம் கொண்டு (vsm)
சீட்டி அடித்தோம் அந்நாள்
(Short Music)
என்ன இருந்தாலும் இன்று கிடைத்தாலும் அன்று போலாகுமா 
இசை கேட்ட நாளாகுமா
மன்னன் நீயும் இசைபோட்ட  நல்ல படம் காண விரைந்த நாளாகுமா 
மீண்டும் அது தோன்றுமா 
மன்னன் நீயும் இசைபோட்ட  நல்ல படம் காண
மன்னன் நீயும் இசைபோட்ட  
நல்ல படம் காண 
விரைந்த நாள் கிட்டுமா 
(MUSIC)
துறக்க முடியாமல் உனது இசைதன்னில் மனதைப் பறி தந்த நாள் 
அந்த நினைவு மறக்காமல் நெஞ்சில் என்றென்றும் இருக்கும் அது தங்க நாள் 
(MUSIC)
இரவில் இமை-மூடி உறக்கம் கொள்ளாமல்  உனது இசை கேட்ட நாள்
கனவில் வரும் காட்சி தனிலும் உன்-கீதம் கேட்டு இதம் கொண்ட நாள் 
கேட்டு இதம் கொண்ட நாள்
உயிரின் உணர்வாக உணர்வின் உயிராக உனது இசை கேட்ட நாள் 
அந்த நினைவு மாறாமல் அணுவின் அணுவாகப் புகுந்ததே எந்தன் நான் 
அய்யே உனது இசை எந்தன் நான் 
ம்ம்ம்..
ஆஹா ஆஹஹாஹாஹ ஆஹஹாஹாஹ ஆஹஹாஹாஹஹா
ஆஹ ஆஹஹாஹாஹஹா.. ஆஹ ஆஹஹாஹாஹஹா


பிற பாடல்கள்


No comments:

Post a Comment