Sunday, May 17, 2020

45 எங்கே-உன் ஈடிருக்கு (தங்கத்தில் முகம் எடுத்து) **




எங்கே-உன் ஈடிருக்கு ஏது-ஏது இணை உனக்கு 
மன்னன் என்று வந்திருக்கும் இசையோ 
நீ நாத-தெய்வம் மண்-வந்த உருவோ 
(2)
எங்கே-உன் ஈடிருக்கு ஏது-ஏது இணை உனக்கு 

எங்கே-உன் ஈடிருக்கு ஏது-ஏது இணை உனக்கு 
கானம் பாட வந்திருக்கும் இறைவா
அந்த கான மன்னர் மன்னவனும் நீதான்
(2)
(MUSIC)
தங்கம் தனைப் போலவே உந்தன் மனம்-அல்லவா 
உந்தன் மனம்-போலவே பொன்னின் இசை-போட்டவா
உன்னை விரல்-மீட்டினால் பொங்கும் இசை-தானன்றோ
உந்தன் ஒரு-பாடல் தனில்-ஓடும் படம்-நூறன்றோ
திரையின் இசைக்குப் பெருமை கொடுக்கும் உன்-பாடலே
ஓ ..
எங்கே-உன் ஈடிருக்கு ஏது-ஏது இணை உனக்கு 
மன்னன் என்று வந்திருக்கும் இசையோ 
நீ நாத-தெய்வம் மண்-வந்த உருவோ 
(MUSIC)
தா .. நீ தாததா  தஸாரிஸா  நிநீதா தாதபா
ஓ …
உந்தன் இசை ஒன்றுதான் இன்றும் நடை-போடுது 
உந்தன் இசைப்-பாட்டினால் பலர் உயிர்-வாழுது
எங்கள் உயிர்மூச்சென உந்தன் இசை-உள்ளது
எங்கள் உயிர்வாழ அது-என்றும் உழைக்கின்றது
நினைக்க நினைக்க இனித்து இருக்கும் உன் பாடலே
(MUSIC)
எந்தன் தினப் பூஜையில் தெய்வம் தனைக்-கேட்கிறேன் 
உன்னை இசை-போடவே மீண்டும் தரக்-கேட்கின்றேன்
இந்த திரை-ராஜ்ஜியம் தன்னில் உனைக்-காணவே 
எந்தன் தமிழ்ப்-பாடல் என்றென்றும் நான்-சொல்லுவேன்
நினைக்க நினைக்க இனித்து இருக்கும் உன் பாடலே
ஓ …
எங்கே-உன் ஈடிருக்கு ஏது-ஏது இணை உனக்கு 
மன்னன் என்று வந்திருக்கும் இசையோ 
நீ நாத-தெய்வம் மண்-வந்த உருவோ
(2)





No comments:

Post a Comment