Wednesday, May 6, 2020

43. இசைக்கு நல்ல (நிலவு வந்து வானத்தையே) **


இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது (2) 

இசையின்-மன்னன் உனையடைந்து  தஞ்சம் என்றது

இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது

மனது-கொள்ளை போகும்-உந்தன் இசையைக்-கேட்டது (2)

அது இசையைக்-கொஞ்சம் உன்னைக்-கேட்டுக் கற்றுக்கொண்டது (2)

மனது-கொள்ளை போகும்-உந்தன் இசையைக்-கேட்டது

அது இசையைக்-கொஞ்சம் உன்னைக்-கேட்டுக் கற்றுக்கொண்டது

கற்றுக்கொண்டது

(MUSIC)

மன்னா-பின் அந்த-ராகம் உன்னைத்-தேடி வந்தது

மன்னனுந்தன் மெல்லிசையால் அழகு சேர்த்துக் கொண்டது 

(2)

பின்னாலே வந்த-பேரும் உந்தன் இசையைச் சொல்வது (2)

பண்ணாக மட்டும் அல்ல தெய்வீகம் என்பது

இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது ஆசை-வந்தது

(MUSIC)

ஆ.

காக்கையின் சிறகிலன்று பா..ரதியார் கண்டது

கண்ணனவன் கருமையினை என்று-கவிதை சொல்லுது

இந்நாளில் அவர்-இருந்தால் உன்னிசையைச் சொல்வது 

என் மன்னா-நல் மெல்லிசையின்  எல்லை-அது என்பது

இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது ஆசை-வந்தது

(MUSIC)

எப்போது வயிற்றுக்கு-நல் உணவு கொள்வதென்பது

என்பதனைத் திருக்குறளும் எடுத்தழகாய்ச் சொல்லுது

காதாலே உண்பது-தான் உனது இசையில்-உள்ளது

அதை உண்டோர்கள்  வயிற்றுக்காக உண்பதென்பதரியது

இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது

இசையின்-மன்னன் உனையடைந்து  தஞ்சம் என்றது

இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது



No comments:

Post a Comment