Wednesday, March 4, 2020

42. மெட்டுக்களை முத்துக்களை(பச்சைக் கிளி முத்துச்சரம்) **



மெட்டுக்களை முத்துக்களை போலே-தர யாரோ
(1+VSM+1)
மன்னா-உன்னைப் போலே-இசை தந்தார்-எவர் தானோ
(vsm)
இன்றும்-இரும் ன்றும்-இரும் உந்தன்-இசைத் தேனோ.. ஆ..
இன்றும்-இரும் ன்றும்-இரும் உந்தன்-இசைத் தேனோ
மன்னன்-உனைப் போலே-இசை தந்தார்-எவர் தானோ
இன்றும்-இரும் ன்றும்-இரும் உந்தன்-இசைத் தேனோ
மன்னன் உன்னைப் போலே-இசை தந்தார்-எவர் தானோ
(MUSIC)
வித்தை-போல பாடல்-ஒன்றே ஒன்றை-மட்டும் கொண்டு
மெட்டை-நூறு போட்டே-உள்ளம் கொள்ளை-கொண்டாய் அன்று
வெள்ளம்-போல வரிகள்-ஓடச் சொன்னார்-கவிஞர்-அன்று
அவை-நின்றாட அழகாய்-இசையின் அணையைச்-செய்தாய் நன்கு
பண்ணில்-ஆடும் இன்னிசை இன்னும்-வேணுமோ (2)
என-நீ-தரும் நல்லின்..னிசை இன்னொரு அதிசயமோ
மெட்டுக்களை முத்துக்களை போலே-தர யாரோ
மன்னா-உன்னைப் போலே-இசை தந்தார்-எவர் தானோ
(MUSIC)
உந்தன்-பேச்சு உந்தன்-மூச்சு எல்லாமும்-இன்..னிசையே
என்றே-உன்னைக் கண்டோர்-கூறும் உண்மை-இம்மண்..மிசையே
சொல்லில்லாத பாடல்-கூட பாரில்-ஒன்று உண்டு
உள்ளம்-தோறும் வாழும்-ஆத்ம ராகம் என்று-நின்று
ஆத்ம-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
அந்த-ராகம் என்பதே உன்னால் ஆனதோ 
என்றே-உளம் கேட்கும்-விதம் உள்ளதுன் இசைத்திறமோ
இன்றும்-இரும் ன்றும்-இரும் உந்தன்-இசைத் தேனோ
மன்னன் உன்னைப் போலே-இசை தந்தார்-எவர் தானோ
(MUSIC)
அந்தக்-காலப் பாடல்-போல உண்டோ-ஒன்..று சொல்ல 
என்றே- என்றும் நெஞ்சில்-ஆடும் ஏக்கம்-ஒன்று மெல்ல
உண்மை-தேட காலம்-நேரம் என்றே-ஏது சொல்லு
என்றே-கூறும் உண்மை-கேட்டு உன்னைக்-கேட்போர் உண்டு 
பள்ளிக்கூடம் போலத்தான் உன்னை-எண்ணுவார் (2)
மன்னா-உனைப் பாடம்-எனப் போற்றிடும் இசையமைப்போர்
இன்றும்-இரும் ன்றும்-இரும் உந்தன்-இசைத் தேனோ
மன்னன்-உன்னைப் போலே-இசை தந்தார்-எவர் தானோ
மெட்டுக்களை முத்துக்களை போலே-தர யாரோ
மன்னா-உன்னைப் போலே-இசை தந்தார்-எவர் தானோ
(BOTH)
அஹ்ஹஹ்ஹஹா ஒஹ்ஹஹ்ஹொஹோ 

லல் லல் லலல் ல லா லா....
லல் லல் லலல் ல லா லா....








No comments:

Post a Comment