Saturday, December 21, 2019

40 ஒளி விழுந்த போது (ஒளி பிறந்த போது) **



ஒளி-விழுந்த போது திரையில் படம்-தெரிந்ததையா 
உந்தன் இசை-எழுந்தபோது அதிலே உயிர்-பிறந்ததைய்யா 
பிம்பம் உயிர்த்தெழுந்ததய்யா
(MUSIC)
ஒளி-விழுந்த போது திரையில் படம்-தெரிந்ததையா 
உந்தன் இசை-எழுந்தபோது அதிலே உயிர்-பிறந்ததைய்யா 
பிம்பம் உயிர்த்தெழுந்ததய்யா
ஸ்ரீதரின் சிவந்தமண் இன்னமும் நினைவினில் 
இருக்குது சிறந்த-உன் பண்ணாலே
பட்டத்து ராணியின் பார்வையும் ஓரிசைக் காவியமானது உன்னாலே 
(BOTH)
ஒளி-விழுந்த போது திரையில் படம்-தெரிந்ததையா 
உந்தன் இசை-எழுந்தபோது அதிலே உயிர்-பிறந்ததைய்யா 
 (MUSIC)
அந்த-ப்ரணவம் என்ற-இசையால் வந்ததென்பாரே உலகம் 
உந்தன்-இசையால் இன்றும்-சுழலும் என்றே கண்டாரே
(2)
அடுத்து-அடுத்து படங்கள்-எல்லாம் வெற்றீ உன்னாலே (2)
எந்த படமும்-உந்தன் இசையொன்றாலே ஓடும்-தன்னாலே
உந்தன் பெயரைத்-திரையில் காணும்-கரங்கள் தட்டும்-தன்னாலே  
(BOTH)
ஒளி-விழுந்த போது திரையில் படம்-தெரிந்ததையா 
உந்தன் இசை-எழுந்தபோது அதிலே உயிர்-பிறந்ததைய்யா 
 (MUSIC)
 இறைவன்-உந்தன் இசையைக்-கேட்க முடிவு-செய்தானோ-ஐயோ 
விண்ணில்-உன்னை இருக்கத்-தன்னில் சேர்த்தே கொண்டானோ
(2)
பாவம்-அந்த இறைவன்-என்றுன் இசையைப் பாடாதே (2)
ஐயோ திரும்ப-உன்னை அனுப்பும்-எண்ணம் சிறிதும்-வராதே 
பிறகு இறைவன்-உன்னை மண்ணில்-படைக்கும் எண்ணம்-வராதே
(BOTH)
ஒளி-விழுந்த போது திரையில் படம்-தெரிந்ததையா 
உந்தன் இசை-எழுந்தபோது அதிலே உயிர்-பிறந்ததைய்யா
பிம்பம் உயிர்த்தெழுந்ததய்யா



No comments:

Post a Comment