Wednesday, August 30, 2017

30 இன்பம் வீசும்(புத்தன் ஏசு) **



இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே  மன்னா உன்னிசை என்றாலே
(1+SM+1)
பொங்கும் உவகைப் பீறிட-நெஞ்சம் துள்ளும் மான்-போலே 
ராகம்-குழைத்து நீயும்-கொடுத்த இன்னிசைத்-தேனாலே
வேள்விகளைப்-போல் நீயும்-உழைத்துக் கொடுத்த-நல்  பண்ணாலே 
கேட்கும் எங்கள் வாழ்வில் என்றும் ஆகும் நன்னாளே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே மன்னா உன்னிசை என்றாலே 
(MUSIC)
துயர் தந்த-சூடு தனில்-நெஞ்சு வெந்து 
குமைகின்ற-போது பொழில் என்று வந்து 
(2)
குளிர்வித்து-நன்கு அணைக்கின்றதென்று 
சிறப்பான-பேரு உன்-பாட்டுக்கொன்று
மன்னர்-மெல்லிசை என்ற-உன்னிசைத் தேன்மழைப் பொழிவாலே 
இந்த-உலகமும் என்றும்-இன்னிசைப் பஞ்சத்தில் அழியாதே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே மன்னா உன்னிசை என்றாலே 
(MUSIC)
பொருள்-கொண்ட பேர்க்கும் வரும்-வாழ்வில் தொல்லை 
கரம் ஏந்தி-வாழ்வில் இளைத்தோர்க்கும் தொல்லை
(2)
எவர் வாழ்வில்-சோக நோய்-வந்த போதும்   
மருந்தாக உன்-தேன் பாடல்-ஒன்று போதும்
அழுதகண்-துடைக்கவும் துவண்டவர்-நிமிரவும் ஒருவழி உந்தன் இசை 
என்பதெற்கென்றே  நீ-தான் மன்னா இறைவனும் பெற்ற-பிள்ளை
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே  மன்னா உன்னிசை என்றாலே
பொங்கும் உவகைப் பீறிட-நெஞ்சம் துள்ளும் மான்-போலே 
ராகம்-குழைத்து நீயும்-கொடுத்த இன்னிசைத்-தேனாலே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே  
மன்னா உன்னிசை என்றாலே




No comments:

Post a Comment