Friday, April 7, 2017

19 இசைப் பாட்டால்(இசை கேட்டால் புவி அசைந்தாடும்) **



Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________

ஆ ..ஆ ..  ஆ ..
இசைப் பாட்டால் மனம்-வசமாக்கும் கலை என்றும் நினதாகும்
(1+SM+1)
வேண்டாம்-உணவும் வேண்டாம்-உறக்கம்
என்று-உன் இசை-கேட்கும் நிலை-என்னிடம் உருவாகும்
வெறி- என்றிட உருவாகும்
இசைப் பாட்டால் மனம் வசமாக்கும் கலை என்றும் நினதாகும்
(MUSIC)
நல்-பாடல் திரைமீது பலர்-போடலாம்
அதை-நாட்டில் பலர்-கேட்டு மகிழ்வாகலாம்
(2)
விண்மீன்கள் பல-வானில் ஒளி வீசலாம் (2)
என்றாலும் நிலவொன்று வான்மீதிலே 
எக்காலும் நிலவே நீ இசை வானிலே 
வேண்டாம்-உணவும் வேண்டாம்-உறக்கம்
என்று-உன் இசை-கேட்கும் நிலை-என்னிடம் உருவாகும்
வெறி-என்றிட உருவாகும்
(MUSIC)
*இனி-ஏது இது போல-ராகங்களை மெருகேற்றி நீ-போட்ட பாடல்களே
மொழி-தாண்டி கேட்கும் உன்-கீதங்களை (2)
கேட்போரும் பணிவார்-உன் பாதங்களை (2)
(Short Music)
கத்தும் கடலலை மண்ணில் உள்ளவரை
உந்தன் இசையுடன் பாடல் கேட்டு-வரும் பார் மீதிலே
(Short Music)
உந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னர்
இன்னும் பிற-இசை கேட்கத் தோன்றவில்லை பார்-மீதிலே
(Short Music)
மண்ணே அழிவுறும் காலம்-வந்திடினும்  
என்றும் இசையுடன் வானில் வாழுமுந்தன் கீதங்களே
கீதங்களே..கீதங்களே .. கீதங்களே..கீதங்களே
இசைப் பாட்டால் மனம் வசமாக்கும் கலை என்றும் நினதாகும்


*பிலாஸ்கானி தோடி என்ற ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்தது  இந்த பாடல். தான்சேன் இறந்த சோகம் தாளாமல்அவரின் மகன் பிலாஸ்கான் , புதிதாக இயற்றி இந்த ராகத்தை இசைத்தார்.அப்போது இறந்த தான்ஸேனின் கரம் உயர்ந்து அவரைப் பாராட்டியது என்று கதை உண்டு.


No comments:

Post a Comment